வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு வட மேற்கு திசையில் நகர்ந்தது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று அதிகாலை ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக புயல் சின்னமாக மாறி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,விழுப்புரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்து வருகிறது. நாளை நெல்லை, கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வங்கக்கடலில் நகர்ந்து கொண்டிருக்கும் புயல் சின்னம் நாளை ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும். அதன் பின்னர் இது ஒடிசா கடற்கரையில் நிலை கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.