கனமழை காரணமாக 12 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை கடிதம் அனுப்பிய தமிழக அரசு.
கிழக்கு திசையிலான காற்றின் வேக மாறுபாட்டினால், இன்று முதல் மார்ச் 3-ம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் எல்லையில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, 1-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் பேரில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடிதத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை செயல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.