கேரளாவில் உள்ள 8 மாநிலங்களுக்கு கனமழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது ஒரு வாரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியுள்ளது. இவை 27ஆம் தேதி வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .ஒரு சில மாவட்டங்களில் அதிக கனமழையும் மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இதனால் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு| கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.