குஜராத்தில் கடும் மழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை மற்றும் புயல் வீசியது. மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் கடும் காற்று வீசும் என்ற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேடா, காந்தி நகர், மெஹ்சானா மற்றும் வதோதரா உள்ளிட்ட பகுதிகளில் 25-40 மில்லிமீட்டர் மழை பதிவானது. மின்னல் தாக்கம், மரங்கள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுவது போன்ற நிகழ்வுகளில் கேடா மாவட்டத்தில் 4 பேர், வதோதராவில் 3 பேர், அகமதாபாத், தாஹோத், ஆரவல்லி மாவட்டங்களில் தலா 2 பேர் மற்றும் ஆனந்த் பகுதியில் 1 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.