திரிபுராவில் மூன்று நாட்களாக பெய்த கனமழையால் 22 பேர் உயிரிழப்பு, 17 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக உறவான கனமழை மற்றும் நிலச்சரிவால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தன. இதுவரை 22 பேர் உயிரிழந்து, 17 லட்சம் பேர் பாதிக்கப்படுகினர். 8 மாவட்டங்களில் 450 நிவாரண முகாம்களில் 65 ஆயிரத்து 500 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, திரிபுரா மாநிலத்திற்கு 40 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 11 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் 4 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.