பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 209 வது அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை 1 முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்த மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவம் மழை பெய்யும். ஆனால் இந்த முறை அதிகமாகவே பெய்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.