சென்னையில் கனமழை காரணமாக 15 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது.
வங்கக்கடல் பகுதியில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த நள்ளிரவு முதல் சென்னையில் கனமழை பெய்ய தொடங்கியது, இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, வேலைக்கு செல்லும் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். மேலும், சென்னைக்கு வரும் 15 விமானங்கள் தாமதமாகியுள்ளன, அதேபோல் சென்னையிலிருந்து துபாய், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களின் புறப்பாடும் தாமதமாகியுள்ளது. இதனால், விமான பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.