கென்யாவின் மொம்பாசா நகரில் கடந்த திங்களன்று பெய்த கனமழையினால் சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து, கிழக்கு ஆப்பிரிக்காவில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு 2 நாட்கள் பிறகு நடந்தது. உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தனர். மேற்கு கென்யாவில் பல ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்த ஆண்டின் பருவமழை, காலநிலை மாற்றத்தால் கென்யாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 188 பேர் காயமடைந்தனர். 293,200க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.