கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரேசில் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு 62 டிகிரி செல்சியஸ் வரை உயர் வெப்பநிலை பதிவான நிலையில், திடீரென மழை பெய்துள்ளது அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வெள்ள நீரில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.