ஜப்பானில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.
இந்த மாதம் முதல் ஜப்பானில் கடுமையான பனிப்புயல் வீசுகிறது. வடக்கு மாகாணங்கள் எனப்படும் புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே ஆகிய பகுதிகளில் இந்த பனிப்புயல் வலுப்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சாலைகள், ரெயில் தண்டவாளங்கள் முழுவதும் பனியால் மூடியுள்ளன.
பொதுப் போக்குவரத்து சேவைகள், குறிப்பாக பஸ்கள் மற்றும் புல்லட் ரெயில்கள், பல நேரங்களில் தடை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும் நிலையில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த கடுமையான பனிப்புயலில் இந்த வாரம் 12 பேர் உயிரிழந்ததாக ஜப்பானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.