அதானி குழுமம் சிமெண்ட் துறையில் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் மெட்டீரியல்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா மற்றும் ஜுவாரி சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை தொடர்ந்து, ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியாவின் பங்கு விலை இன்று 18% உயர்ந்துள்ளது.
இந்த கையகப்படுத்தல் மூலம், அதானி குழுமத்தை சேர்ந்த அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கும். ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா மற்றும் ஜுவாரி சிமெண்ட் நிறுவனங்களின் உற்பத்தி திறனை இணைத்து, அம்புஜா சிமெண்ட் நிறுவனம் 2028 ஆம் ஆண்டுக்குள் தனது மொத்த உற்பத்தித் திறனை 140 மில்லியன் டன்களாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது.