ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் 13 மற்றும் 20-ஆம் தேதி இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு, ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் மக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை பெற்றுள்ளது.ஹேமந்த் சோரன் 54 இடங்களுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். இது, கடந்த 24 ஆண்டுகளில் ஜார்கண்டில் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் முதல்முறை ஆகும். இந்த வெற்றிக்கு பின்பாக, சோரன் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.விரைவில், பதவியேற்பு விழா நவம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.