வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 1500 ரூபாய் வரை வாகனத்திற்கான விலையில் உயர்வு காணப்படும் என நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு இருசக்கர வாகன மாடலுக்கும் வெவ்வேறு அளவில் விலை உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் இருசக்கர வாகனங்களின் விலைகளை உயர்த்துவதாக கூறியுள்ளது. மோட்டார் சைக்கிள் ரக வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர் ரக வாகனங்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படுகின்றன.