ஹிஸ்புல்லா, இஸ்ரேலை நோக்கி 165 ஏவுகணைகளை வீசியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, வாராந்திர மந்திரிசபை கூட்டத்தில் பேசியபோது, "பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் எதிர்ப்பையும் மீறி பேஜர் தாக்குதல் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் கொலை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன" என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கள், ஹிஸ்புல்லா அமைப்பினரின் கடும் எதிர்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
இதன் பிறகு, ஹிஸ்புல்லா, இஸ்ரேலை நோக்கி 165 ஏவுகணைகளை வீசியுள்ளது. இவை வடக்கு இஸ்ரேலின் ஹைபா பகுதியில் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல், இஸ்ரேலுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக விளங்கியுள்ளது.