ஹிஸ்புல்லா இஸ்ரேல் ராணுவ தளங்களை குறிவைத்து இருநூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்கியுள்ளது.
சமீப காலமாக இஸ்ரேல் ராணுவமும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று லெபனானில் ராணுவ தளபதி முகமது நாமே நாசர் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகினார், அதற்கு பதில் அளித்து வரும் விதமாக ஹிஸ்புல்லா இஸ்ரேல் ராணுவ தளங்களை குறி வைத்து இருநூறுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்கியுள்ளது. இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இதில் ஏராளமான ஏவுகணைகள் இடமறிக்கப்பட்டது. எனினும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. கடுமையான வெடிப்பொருட்கள் நிரம்பிய ராக்கெட்டுகள் மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளது.