இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 250 ராக்கெட்டுகளை ஏவியதில் 7 பேர் காயமடைந்தனர்.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 2023 அக்டோபர் 7ஆம் தேதி, காசா முனையில் இருந்து இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் பணயக் கைதிகளாக காசா முனைக்கு கடத்தப்பட்டனர். இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் அறிவித்து, 117 பணய கைதிகளை மீட்டது. சில பணயக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் 101 பேர் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர். காசாவில் 44,000 பேர் இறந்துள்ளனர். அதேபோல் மேற்குகரையில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் ஒரு ஆண்டு கடந்துள்ளது. லெபானானில் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில்,நேற்று, ஹிஸ்புல்லா 250 ராக்கெட்டுகளை ஏவியதில் 7 பேர் காயமடைந்தனர்.














