இஸ்ரேல் ஆக்ரமிப்பு கோலன் குன்றுகள் பகுதி மீது ஹிஸ்புல்லா 50 ஏவுகணைகளை வீசியது.
சிரியாவின் கோலன் குன்றுகள் பகுதியில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சிலர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் செவ்வாய் அன்று லெபனானுக்குள் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இது கொடுக்கப்பட்டுள்ளது என்ற ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது. சிரியாவின் கோலன் குன்றுகள் தற்போது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.














