தொகுப்பூதிய செவிலியர்களுக்குச் சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்ற உத்தரவு

April 22, 2025

தொகுப்பூதிய செவிலியர்களுக்குச் சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இந்தப் பிரச்னையை நீதிமன்றம் எடுத்துக் கொண்டு, இருவரும் ஒரே பணியை செய்கிறார்களா என ஆராய்ந்து, ஆறு மாதங்களில் முடிவெடுக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், செவிலியர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், […]

தொகுப்பூதிய செவிலியர்களுக்குச் சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இந்தப் பிரச்னையை நீதிமன்றம் எடுத்துக் கொண்டு, இருவரும் ஒரே பணியை செய்கிறார்களா என ஆராய்ந்து, ஆறு மாதங்களில் முடிவெடுக்க அரசு கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், செவிலியர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை மூன்று மாதங்களில் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவிட்டது. இந்த உத்தரவை மீண்டும் புறக்கணித்தால், அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை வழங்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu