தமிழக அரசு பள்ளிகளுக்கு அதிவேகம் கொண்ட இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இருந்து இணையதள வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் உள்ள 6223 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இதுவரை 5913 பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 6992 நடுநிலைப்பள்ளிகளில் 3799 பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரத்து 338 தொடக்கப்பள்ளிகளில் 10 ஆயிரத்து 620 பள்ளிகளில் இவ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 20 ஆயிரத்து 332 பள்ளியில் இப்ப ஆண்டு பணியானது முழுமையாக முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பள்ளிகளுக்கு ஜூன் மாதம் இரண்டாம் வார இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது