ஹிஜாப் மேல் முறையீடு வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

August 30, 2022

ஹிஜாப் மேல் முறையீடு வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்தில், அரசு பி.யூ. கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் 'ஹிஜாப்' அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி மாணவிகள் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள், முஸ்லிம் […]

ஹிஜாப் மேல் முறையீடு வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்தில், அரசு பி.யூ. கல்லூரியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் 'ஹிஜாப்' அணிந்து வகுப்புக்கு வர தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது. மாநில அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி மாணவிகள் கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள், முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சுமார் 5 மாதங்களுக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஹிஜாப் வழக்கு குறித்து பதிலளிக்கும்படி கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் அந்த மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu