ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்தால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம், 700 கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. ஹிந்தால்கோ நிறுவனம் இந்தியாவின் முன்னணி அலுமினியம் உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தால்கோ நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. இவை ஆண்டுக்கு 7.6% ரிட்டர்ன்ஸ் தருபவை ஆகும். மேலும், இந்த பத்திரங்கள், மதிப்பிடப்பட்ட, பட்டியலிடப்பட்ட, பாதுகாப்பற்ற, மீட்டெடுக்கக்கூடிய, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வகையைச் சேர்ந்ததாகும். இவ்வாறு, 70000 கடன் பத்திரங்களை வெளியிட்டு, 700 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 14 மாதங்கள் கழித்து, கடன் ஈட்டு பத்திரங்கள் இணையாகப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.