அயர்லாந்தில் நிகழவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் ஆகஸ்ட் 18- ஆம் தேதி அயர்லாந்திற்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து அந்த அணியுடன் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அதிக பணிச்சுமையின் காரணமாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் சுப்மன் கில சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கும் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு பிறகு ஹர்திக் பாண்டியா எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்து உலகக் கோப்பை போட்டிக்கு அணி தேர்வு அமையும். உலக கோப்பையில் துணை கேப்டனாக ஹர்திக் இருப்பார் என்பதை மறந்துவிடக்கூடாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.