வரலாற்றில் முதல் முறையாக, விண்வெளியில் 16 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பூமிக்கு வெற்றிகரமாக லேசர் செய்தி கிடைக்கப்பட்டுள்ளது.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தொலைவை போன்ற 40 மடங்கு அதிகமான தொலைவில் இருந்து லேசர் செய்தி கிடைக்கப்பட்டுள்ளது. நாசாவின் சைக் விண்கலத்தில் லேசர் செய்தி அனுப்பும் கருவி அனுப்பப்பட்டது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள ஹாலே தொலைநோக்கியுடன் சைக் விண்கலம் தொடர்பு ஏற்படுத்தியது. அப்போது, கிட்டத்தட்ட 50 வினாடிகளில் விண்கலத்திலிருந்து பூமிக்கு லேசர் ஒளி வந்தடைந்தது. வரலாற்றில் முதல் முறையாக, லேசர் ஒளி வெகுதொலைவில் இருந்து கிடைக்கப்பட்டுள்ளதால், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம், எதிர்காலத்தில், தொலைதூர விண்வெளி திட்டங்களுக்கான தொலைத்தொடர்பு சேவைகள் எளிமையாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.