இந்தியாவின் முதல் யுபிஐ ஏடிஎம் சேவையை ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீசஸ் தொடங்கியுள்ளது. ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனம், நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதியின் கீழ் இந்த ஏடிஎம் ஐ தொடங்கியுள்ளது.
இந்த ஏடிஎம் நிச்சயமாக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவதாக என் பி சி ஐ தெரிவித்துள்ளது. மேலும், வங்கி சேவைகள் மற்றும் பண பரிவர்த்தனை முறைகளை அனைவருக்கும் எளிமையாக வழங்குவதில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இதனால், இந்தியாவின் கிராமப்புறங்களிலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஹிட்டாச்சி நிறுவனம் மட்டுமே இந்தியாவில் இதுபோன்ற ஒயிட் லேபிள் ஏடிஎம் சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.