தமிழ்நாட்டில் உலக அளவிலான 'Home of Chess Academy' விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விரைவில் 'Home of Chess Academy' தொடங்குவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சென்னை கலைவாணர் அரங்கில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் சாதனைக்கு பாராட்டும் விழாவில் வெளியிடப்பட்டது.தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 கிராண்ட் மாஸ்டர்கள் மற்றும் குகேஷின் வெற்றி குறித்து உரையாற்றிய மு.க. ஸ்டாலின், செஸ் விளையாட்டை அறிவு சார்ந்த விளையாட்டாக கவுரவித்தார். குகேஷுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், தமிழக அரசு விளையாட்டு துறையில் பல்வேறு உதவிகளை வழங்கி, தமிழக வீரர்களை ஊக்குவித்து வருகின்றது. "வெற்றி தோல்வி முக்கியம் அல்ல, பங்கேற்புதான் முக்கியம்" என ஸ்டாலின் கூறினார்.