பின்னாடி பாடகி பி சுசிலாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி திரைப்பட பின்னணி பாடகி பி சுசீலா. இவரி ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரை கவுரவிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இணை வேந்தரான அமைச்சர், கர்நாடக இசை கலைஞர், பேராசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மாணவ மாணவிகள் என பலர் பங்கேற்றனர்.