85 வயதிற்கு மேல் தபால் ஓட்டளிப்பது எப்படி

March 18, 2024

பாராளுமன்றத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கி உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை பல பகுதிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு 12டி படிவம் அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டிலிருந்தே வாக்களிக்க […]

பாராளுமன்றத் தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கி உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறை பல பகுதிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு 12டி படிவம் அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டிலிருந்தே வாக்களிக்க விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும். அதன்படி தேர்தல் மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்களிக்கும் நாளை நிர்ணயிப்பார். அவர்களின் வீட்டிற்கு தபால் ஓட்டு வழங்கப்படும்.அதில் தங்கள் விருப்ப வேட்பாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் அந்த தபால் ஓட்டினை தேர்தல் அதிகாரி பெற்றுக்கொள்வார். வாக்களிக்கும் பொழுது தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோ கிராபர் மற்றும் போலீசார் ஆகிய கொண்ட குழுவினர் வாக்கு பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீடுகளுக்கு செல்வார். பின்னர் அங்கு வாக்குப்பதிவு வீடியோவாக பதிவு செய்யப்படும்.
இந்த முறையானது சுமார் 20 நிமிடங்களில் முடிந்துவிடும். அதன் பின்னர் அவர்கள் வாக்குகள் தபால் வாக்குமூலம் எண்ணப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu