கடந்த 2023 ஆம் ஆண்டில், எச் எஸ் பி சி நிறுவனம் வரலாற்று உச்ச லாபத்தை பதிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம், பங்குகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 80% அளவுக்கு ஹெச் எஸ் பி சி வங்கி நிறுவனத்தின் வரிக்கு முன்னான லாபம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு, நிறுவனத்தின் லாபம் 30.3 பில்லியன் டாலர்கள் அளவில் உள்ளது. வரிகளைக் கழித்து 24.6 பில்லியன் டாலர்கள் அளவில் லாபம் பதிவாகியுள்ளது. எனவே, 2 பில்லியன் டாலர்கள அளவுக்கு பங்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக எச்எஸ்பிசி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 7 பில்லியன் டாலர்கள் அளவில் எச் எஸ் பி சி பங்குகள் திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில், பலதரப்பட்ட பொருளாதார மற்றும் சர்வதேச அரசியல் அழுத்தங்கள் நிலவும் சூழ்நிலையிலும், பங்குகளை திரும்பப் பெறுவதாக ஹெச்எஸ்பிசி அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.