கடந்த 2021 ஆம் ஆண்டு, நியூ மெக்சிகோ பகுதியில் 60 க்கும் மேற்பட்ட மனித காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை ஆய்வு செய்ததில், இவை 22,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கூறப்பட்டன. ஆனால், இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு, இரண்டாம் முறையாக காலக்கணிப்பு நடத்தப்பட்டதில், இந்த காலடிகள் 22000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, சுமார் 16,000 அல்லது 14,000 ஆண்டுகளுக்கு முன்புதான் சைபீரியாவில் இருந்து வட அமெரிக்காவுக்குள் பொதுமக்கள் வந்தனர் என கூறப்பட்டது. தற்போது, மனித காலடிகளின் காலம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்த கருத்து வலுவிழந்து உள்ளது. மேலும், காலடித்தடங்களின் காலக்கணிப்பை கூடுதலாக உறுதி செய்ய, அங்கு கிடைக்கும் தாவரங்கள், மகரந்தங்கள் உள்ளிட்ட உயிரி பொருள்களின் கால கணிப்புகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.