நாசா, வால்கிரி என்ற ஹுமனாய்டு ரோபோவை உருவாக்கியுள்ளது. மனிதரைப் போலவே 6 அடி 2 அங்குல உயரத்தில், 300 பவுண்டு எடையில், இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
மனிதரைப் போன்ற அதே உருவத்துடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. முறையான மென்பொருள் இயக்கம் கொண்டு வந்தால், மனிதர்களைப் போலவே இயல்பான முறையில் இந்த ரோபோ பணியாற்றும் என கூறப்பட்டுள்ளது. நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் இந்த ரோபோ பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோபோ, விண்வெளி திட்டங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. எதிர்கால விண்வெளித் திட்டங்களில் இந்த ரோபோவின் பயன்பாடு அதிகரிக்கும் என நாசா கூறியுள்ளது.