2030 க்குள் மனிதர்கள் நிலவில் தங்கியிருந்து பணி செய்யலாம் - நாசா

November 21, 2022

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்டெமிஸ் என்ற திட்டத்தில் நாசா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி சென்றடைந்துள்ளது. இதுகுறித்து பேசிய நாசா விஞ்ஞானி ஹோவர்ட் ஹு, "இது நாசாவுக்கு வரலாற்று தினம் ஆகும். மேலும், அனைத்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் சிறந்த நாளாகும். இந்த திட்டத்தின் வெற்றி மூலம், ஆர்டெமிஸ் ராக்கெட்டில் மனிதர்களை நிலவுக்கு […]

மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்டெமிஸ் என்ற திட்டத்தில் நாசா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகள் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி சென்றடைந்துள்ளது.

இதுகுறித்து பேசிய நாசா விஞ்ஞானி ஹோவர்ட் ஹு, "இது நாசாவுக்கு வரலாற்று தினம் ஆகும். மேலும், அனைத்து விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் சிறந்த நாளாகும். இந்த திட்டத்தின் வெற்றி மூலம், ஆர்டெமிஸ் ராக்கெட்டில் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம். வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், மனிதர்கள் நிலவில் தங்கி இருந்து பணி செய்யும் சூழல் உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நிலவுக்கும் பூமிக்கும் நிலையான போக்குவரத்து ஏற்படும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu