ஹங்கேரி பிரதமர் விக்டர் ஸ்வீடன் நேட்டோவில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு நேட்டோ அமைப்பில் உறுப்பினராக சேர விரும்பினால் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் அந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க வேண்டும். ஐரோப்பிய நாடான ஸ்வீடன் எந்த உலக போரிலும் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது. உக்ரைன் போருக்கு பின்னர் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைக்கு மாறியது. இந்நிலையில், 2022-ல் ஸ்வீடன் நேடோ அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்தது. அப்போது உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஸ்வீடன் தனக்கு எதிரான நாடு என்று கூறி ஸ்வீடனை ஹங்கேறி ஆதரிக்க மறுத்தது.
இந்நிலையில் ஹங்கேரி தனது நிலையை மாற்றிக் கொண்டது. ஹங்கேரி பிரதமர் விக்டர் இரு நாடுகளும் ஒருவருக்காக மற்றொருவர் இறக்கவும் தயாராக உள்ளோம் என்று கூறி ஸ்வீடன் நேட்டோவில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பார்க் கூறியதாவது, நேட்டோ முன்பை விட பாதுகாப்பான மற்றும் வலுவான அமைப்பாக மாறிவிட்டது என்றார். முன்னதாக துருக்கி ஸ்வீடன் இணைவதை விரும்பவில்லை. தனது நாட்டிற்கு எதிரான குருது இன பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் துருக்கி தனது முடிவை மாற்றிக் கொண்டது. ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.