ஒரே நாளில் பன்மடங்கு வலு பெற்ற மில்டன் சூறாவளி - அறிவியல் பின்னணி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி வேகமாக நெருங்கி வரும் மில்டன் சூறாவளி, கடந்த அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் மிக வேகமாக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வகை 1 புயலிலிருந்து வகை 5 புயலாக மாறியுள்ளது. வெறும் 12 மணி நேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டரிலிருந்து 280 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. மேலும், மத்திய அழுத்தம் 988 மில்லிபாரிலிருந்து 911 மில்லிபாராக குறைந்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நிலவரப்படி, மில்டன் சூறாவளியின் காற்றின் […]

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி வேகமாக நெருங்கி வரும் மில்டன் சூறாவளி, கடந்த அக்டோபர் 6 மற்றும் 7 தேதிகளில் மிக வேகமாக தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வகை 1 புயலிலிருந்து வகை 5 புயலாக மாறியுள்ளது. வெறும் 12 மணி நேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டரிலிருந்து 280 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. மேலும், மத்திய அழுத்தம் 988 மில்லிபாரிலிருந்து 911 மில்லிபாராக குறைந்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நிலவரப்படி, மில்டன் சூறாவளியின் காற்றின் வேகம் மணிக்கு 290 கிலோமீட்டரை எட்டியது. இது 2024 ஆம் ஆண்டில் உருவான சூறாவளிகளில் மிகவும் வலுவானது.

வெதுவெதுப்பான வளைகுடா நீர், குறைந்த காற்றழுத்தம் மற்றும் வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் ஆகியவை இந்த சூறாவளி இவ்வளவு வேகமாக வலுவடைவதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற சூறாவளிகள் அடிக்கடி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மில்டன் சூறாவளி புளோரிடாவின் வளைகுடா கடற்கரைப் பகுதிகளை நெருங்கி வருவதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu