ஹூண்டாய் நிறுவனம் தனது கார் விலைகளை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் கார் நிறுவனத்தின் இந்திய பிரிவு, ஜனவரி மாதம் முதல் கார் விலைகளை உயர்த்துவதாக கூறியுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்ததன் விளைவாக, இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்படுவதாக கூறியுள்ளது. ஏற்கனவே, மாருதி சுசுகி, ஆடி, டாடா மோட்டார்ஸ் போன்ற வாகன நிறுவனங்கள் ஜனவரி மாதம் முதல் வாகன விலைகளை உயர்த்துவதாக அறிவித்திருந்தன. இந்த நிறுவனங்களின் வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் தற்போது புதிதாக இணைந்துள்ளது. எனினும், எந்த அளவில் வாகன விலைகள் உயர்த்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.














