ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, தொடர்ச்சியாக, ஊழியர்கள் பணி நீக்கம், போலி கணக்குகள் தடை, ப்ளூடூத் அம்சத்தில் மாற்றங்கள் போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, தான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்ற கருத்துக் கணிப்பை எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். அதற்கு, மக்கள் தரப்பிலிருந்து, 57.5% பேர் அவர் பதவி விலக வேண்டும் என்றும், 42.5% வேண்டாம் என்றும் வாக்களித்திருந்தனர். இந்த முடிவுகள் வெளியான நிலையில், விரைவில், சரியானதொரு முட்டாளை இந்த பதவிக்கு கண்டறிந்த பின்னர், தான் பதவி விலகுவதாகவும், அதுவரையில் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமைப் பொறுப்பு வகிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.














