உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் இலகுரக ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை பரிசோதித்தது

October 6, 2022

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் அக்டோபர் 3ம் தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் ஜோத்பூரில் நடைபெற்ற விழாவில் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஹெலிகாப்டர்களுக்கு பிரச்சந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராணுவத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது என்ற இலக்கை பிரச்சந்த் ஹெலிகாப்படர்கள் பூர்த்தி செய்துள்ளன. இந்தியாவின் ராணுவம் மற்றும் விமானப்படையின் வலிமையை இந்த ஹெலிகாப்டர்கள் […]

அதிநவீன தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்கள் அக்டோபர் 3ம் தேதி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் ஜோத்பூரில் நடைபெற்ற விழாவில் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த ஹெலிகாப்டர்களுக்கு பிரச்சந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராணுவத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது என்ற இலக்கை பிரச்சந்த் ஹெலிகாப்படர்கள் பூர்த்தி செய்துள்ளன. இந்தியாவின் ராணுவம் மற்றும் விமானப்படையின் வலிமையை இந்த ஹெலிகாப்டர்கள் அதிகரித்துள்ளன” என்று கூறினார். பின்னர், ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை பரிசோதித்தது. கவச உடை அணிந்து, பிரச்சந்த் ஹெலிகாப்டரில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார்.

உலக நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள், அதிகமான, சக்தி வாய்ந்த, நவீன ஹெலிகாப்டர்களுடன் வான்வெளியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது, இந்தியாவும் இணைந்துள்ளது. LCH எனப்படும் புதிய வகையான லைட் காம்பாட் ஹெலிகாப்டர்களை இந்தியா பரிசோதனை செய்து, விமானப்படையில் இணைத்ததன் மூலம், இந்தியா இதனை சாத்தியப்படுத்தி உள்ளது. சுமார் 3887 கோடி ரூபாய் மதிப்பில் 15 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு, 10 ஹெலிகாப்டர்கள் விமானப்படைக்கும், 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளதகாக் கூறப்படுகிறது.

அதிகபட்சம் 5,800 கிலோ எடையை தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரச்சந்த் ஹெலிகாப்டரில், விமானிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் தரையிறங்கும் கியர் அம்சம் அமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 268 கிலோ மீட்டர் வேகத்தில், 6.5 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும் இந்த ஹெலிகாப்டரில் இருந்து, ஏவுகணைகள் மூலம் விண் மற்றும் தரையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலகுரக ஹெலிகாப்டர்களின் காணொளி, இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu