தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு, 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சில முக்கிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை:
கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, கூட்டுத்துறை செயலாளர்கள் மாற்றப்பட உள்ளனர். TANGEDCO தலைவர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.