ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை தேர்வு செய்ய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது. அதில் நமீபிய வீரரான எராஸ்மஸ், யுஏஇ கேப்டன் ஆன முஹம்மது வாசிம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் ஏப்ரல் மாத சிறந்த வீரர், வீராங்கனைகளை ஐசிசி அறிவித்ததில் யூ.ஏ.இ கேப்டன் முஹம்மது வாசிமுக்கு சிறந்த வீரர் விருதும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹேலி மேத்யூசுக்கு சிறந்த வீராங்கனை விருதும் வழங்கப்பட்டுள்ளது