ஐசிசி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை விதித்தது

November 22, 2023

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண், பெண் மற்றும் பாலின பாகுபாடு இன்றி ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரியிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. மேலும் புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆணுக்குரிய தன்மை கொண்ட ஒருவர் ஆப்ரேஷன் மற்றும் பாலின மறு சீரமைப்பு சிகிச்சை பெற்று பெண்ணாக மாறினால் அவர் சர்வதேச […]

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண், பெண் மற்றும் பாலின பாகுபாடு இன்றி ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரியிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
மேலும் புதிய பாலின தகுதி விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆணுக்குரிய தன்மை கொண்ட ஒருவர் ஆப்ரேஷன் மற்றும் பாலின மறு சீரமைப்பு சிகிச்சை பெற்று பெண்ணாக மாறினால் அவர் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் மாண்பு, நேர்மை, வீராங்கனைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் பாலினத்தவர்கள் பங்கு பெற முடியாது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் போட்டிகளில் பாலின தகுதி முறைகளை பின்பற்றும் விஷயத்தை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்த கொள்ளலாம் என ஐ சி சி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu