உக்ரைனில் தாக்குதல் நடத்தியதற்காக முன்னாள் பாதுகாப்பு மந்திரி மற்றும் அதன் ராணுவ தளபதி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
போர் விதிகளை மீறி ரஷ்யா மனிதாபிமானமற்ற செயல்களை உக்ரைனில் செய்ததாக நெதர்லாந்தில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதற்காக முன்னாள் பாதுகாப்பு மந்திரி மற்றும் அதன் ராணுவ தளபதி ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு மற்றும் தலைமை தளபதி ஜெனரல் வலேரி ஆகியோர் மீது போர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக நாடு கடத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் மீது எழுந்த புகாரின் பேரில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.