ஐஸ்லாந்து ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் கிரெண்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
ஐஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட எரிமலைகள் அவ்வப்போது வெடித்து வருகின்றன. அதில் ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் கிரெண்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து மிக உயரத்தில் தீப்பிழம்புகள் வெளியேறின. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளவு ஏற்பட்டு அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது.
இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது. இந்த எரிமலை வெடிப்பு நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்தில் இது வெடித்து சிதறியது.