ஐசிஐசிஐ வங்கியின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கி ஐ சி ஐ சி ஐ ஆகும். இந்த வங்கியின் மூன்றாம் காலாண்டு அறிக்கையின் படி, நிகர லாபத்தில் வரலாற்று உச்சம் எட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஐசிஐசிஐ வங்கியின் நிகர லாபம் 102.72 பில்லியன் ரூபாய் ஆகும். எனினும், தொடர்ந்து நான்காவது காலாண்டாக, வங்கிக்கு வட்டி மூலமாக கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. குறிப்பாக, கடன் வழங்கப்பட்டதற்கும் வட்டி வசூலிக்கப்பட்டதற்கும் இடையிலான வித்தியாசம் 13.4% உயர்ந்து 186.78 பில்லியன் ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் அளவு 2.3% ஆக குறைந்துள்ளது.