காசாவில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காசாவில் கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், காசா போர் இறுதிக் கட்ட நிலையை அடைந்துள்ளது. கடந்த இரு வாரமாகவே அரபா மீதான எத்தனை தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் அதிகரித்துள்ளது. பள்ளி மற்றும் அகதிகள் முகாம்கள் மீது கடந்த சில நாட்களாக கடும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பலியாகுவதாக அங்கிருந்து வரும் ஊடக செய்திகள் கூறுகின்றன. குழந்தைகள் பசி பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
இதையடுத்து காசாவில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அந்த நகரத்தை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போர் நடவடிக்கை அதிகப்படுத்த இருப்பதாகவும் அதனாலேயே காசா நகரத்தில் உள்ள அனைவரும் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது காசாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் இந்த எச்சரிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதோடு இஸ்ரேலின் நடவடிக்கை மிகுந்த கவலையை அளிப்பதாக ஐநா தெரிவித்து இருக்கிறது.