குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வாகனம் ஏலம்

November 3, 2022

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் அடிப்படையில் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் என்பது கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அபராதம் பெற்றவர்கள், அபராத ரசீது மட்டும் பெற்றுச் சென்றுவிட்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். அபராத தொகை செலுத்தாதவர்களுக்கு காவல்துறை அழைப்பு மையங்கள் மூலம் பலமுறை நினைவூட்டியும் தொகையை செலுத்தவில்லை. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை […]

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் அடிப்படையில் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் என்பது கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு அபராதம் பெற்றவர்கள், அபராத ரசீது மட்டும் பெற்றுச் சென்றுவிட்டு பணம் செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். அபராத தொகை செலுத்தாதவர்களுக்கு காவல்துறை அழைப்பு மையங்கள் மூலம் பலமுறை நினைவூட்டியும் தொகையை செலுத்தவில்லை.

எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் இந்த வருட ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை குடித்துவிட்டு வாகனம் ஒட்டியவர்களில் யார் மீது வழக்கு உள்ளது மற்றும் யாரெல்லாம் அபராத தொகையை செலுத்தவில்லையோ அவர்கள் மீது நீதிமன்றம் மூலம் வாரண்ட் பிறப்பிக்கப்படும்.

அந்த வாரண்டை பெற்றவர்கள் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். அவ்வாறு அபராத தொகை செலுத்தவில்லை என்றால் அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu