ரூ.7 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த தேவையில்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
மேலும், வரி விகிதங்களில் மாற்றம் செய்தும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரை - வரி இல்லை. ரூ.6 முதல் ரூ.9 லட்சம் வரை - 10 சதவீத வரி ; ரூ.9 முதல் ரூ.12 லட்சம் வரை - 15 சதவீத வரி; ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை - 20 சதவீத வரி; ரூ.15 லட்சத்திற்கு மேல்- 30 சதவீத வரி என அறிவிக்கப்பட்டுள்ளது.