கடும் நிதிச் சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு 58000 கோடி ரூபாய் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. சுமார் 25% பாகிஸ்தான் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எனவே நாட்டின் பொருளாதாரத்தை காப்பதற்காக, நட்பு நாடுகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவிகளை பாகிஸ்தான் நாடி உள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 58000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வரிவிதிப்பு நடைமுறைகள், ஊழல் தடுப்பு விதிமுறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்தல் போன்றவற்றில் சீர்திருத்த முறைகளை கொண்டு வந்து, நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை தெரிவித்துள்ளது.