தமிழகத்தில் வாகன விபத்தில் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வாகன விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இது குறித்து அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விபத்து எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. மேலும் சமீப காலமாக 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன. மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 2019 இன் படி விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயம் அடைந்தாலோ அல்லது இறந்தாலோ வாகனத்தை மைனர் அல்லது வேறு யாரேனும் இயக்கினால் மட்டுமே உரிமையாளர்களிடமிருந்து இழப்பீடு பெரும் சட்டம் திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு ஆர்.சி தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒரு வருடத்திற்கு வண்டி ஓட்ட முடியாமல் போய்விடும் சட்டம் தற்போது அமலில் வந்துள்ளது.