கடந்த மே 9ம் தேதி, இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் கடும் வன்முறை ஏற்பட்டது. இதன் பின்னணியில் செயல்பட்டதாக இம்ரான் கான் முக்கிய குற்றவாளியாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மேலும் பல வன்முறை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இம்ரான் கான் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருவதால், பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.