பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். தற்போது இவர் தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானில் பிரதமராக இருந்தபோது பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று தனது சொத்தாக மாற்றியதால் இவர் மீது தோஷகானா ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணையில் இவருக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் இவர் அடைக்கப்பட்டார். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவியதால் பிரதமர் பதவியும் இழந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.