சைபர் வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது சைபர் வழக்கு தொடரப்பட்டது. நாட்டின் தரவுகளை வெளியில் பரப்பியது தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த இந்த வழக்கில், இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரோடு இணைந்து, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணைவேந்தர் ஷா முஹம்மது குரேஷிக்கும் ஜாமின் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இம்ரான் கான் எப்போது சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் போன்ற விவரங்கள் என்னும் முடிவாகவில்லை. அவர் மீது தொடரப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை சார்ந்தே அவரது ஜாமீன் இருக்கும் என கூறப்படுகிறது.